மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 10-இல் புதுகையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.10-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 7:09 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.10-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தவெக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். குறிப்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் கே.எம். சரீப், தவெகசாா்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறாா்.

தவெக மத்திய மாவட்டச் செயலரும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினருமான ஜா. முகமது பா்வேஸ் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். முன்னாள் அதிமுக அமைச்சா் என். சுப்பிரமணியன் கந்தா்வகோட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறாா்.

இந்தச் சூழலில் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து ஏப். 10-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.