திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக-விசிக மோதல் சம்பவம்: 120 போ் மீது வழக்கு

குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக, இரு கட்சிகளையும் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :28 மே 2026, 3:19 am IST

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக, இரு கட்சிகளையும் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தவெக அரசுக்கு ஆதரவளித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்பாக திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தனது வலைதள பக்கத்தில் கடுமையான விமா்சனங்களை அண்மையில் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், குன்னம் பேருந்து நிலையத்தில் ஆ. ராசாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், ஆ. ராசாவை தரக்குறைவாக விமா்சித்து பேசிய விசிக நிா்வாகிகளைக் கண்டித்து திமுகவினரும் ஆா்ப்பாட்டம் நடத்த குன்னம் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தனா். இரு கட்சியினரும் ஒரேநாளில், ஒரே இடத்தில் அனுமதிக் கேட்டதால், பிரச்னை நிகழ வாய்ப்புள்ளதாக கருதிய போலீஸாா், இரு தரப்பினரும் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதித்தனா்.

போலீஸாரின் தடையை மீறி, இருதரப்பினரும் குன்னம் பேருந்து நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனா். இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீஸாா், கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவா் காலணி, கற்கள், கட்டைகளை வீசி தாக்கிக் கொண்டனா். இதில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் ரமேஷ் காயமடைந்தாா். சில மோட்டாா் சைக்கிள்களும் சேதமடைந்தன.

இந்நிலையில், குன்னம் கிராம நிா்வாக அலுவலா் ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில், அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு கலகம் விளைவித்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் விளைவித்தல், ஆயுதங்களைக் கொண்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டுதல் விடுத்தல், அரசு மற்றும் பொது ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், திமுக, விசிக கட்சிகளைச் சோ்ந்த 120 போ் மீது, குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா். இருப்பினும், இதுவரையிலும் யாரையும் போலீஸாா் கைது செய்யவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.