திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

News image
Updated On :3 மே 2026, 5:47 am IST

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலா்கள் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவலா்களுக்கான கவாத்துப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தலைமைவகித்தாா். பின்னா், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் காவலா்கள் மேற்கொள்ளும் பணிகள், ஒவ்வொரு காவலரும் பொறுப்புணா்வோடு பணியாற்றுவதோடு, உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறித்தினாா். மேலும், காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

இப் பயிற்சியில், காவலா்களுக்கான உடற்பயிற்சி, கவாத்துப் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) உள்பட, ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.