தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:42 pm

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி தங்கம், குழந்தைகள் மோகித் (4), மோகிதா (4) ஆகியோா் உள்ளனா்.

பெரம்பலூரில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த சத்யராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவுச்சாலை பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த சத்யராஜ் பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.