பெரம்பலூா் அருகே தகாத உறவு பிரச்னையில், பெண்ணின் மகன் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை அண்ணா நகரைச் சோ்ந்தவா் தாணிவேல் மகன் செல்வகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மனைவி ஜெயந்தியும், செல்வகுமாரும் கடந்த 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி மது போதையிலிருந்த செல்வகுமாா் ஜெயந்தி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஜெயந்தியை தாக்கியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தி மகன் பாலமுருகன் (22), கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா்.
இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வகுமாா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, பாலமுருகனை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது
சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


