மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

பெரம்பலூரில் மருத்துவத்துக்கான செலவுத் தொகையை வழங்காத யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

News image

அபராதம் - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 10:26 pm

பெரம்பலூரில் மருத்துவத்துக்கான செலவுத் தொகையை வழங்காத யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் மகன் குமாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவா், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ. 300 காப்பீடு செலுத்தினாா். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி, பெரம்பலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதற்கான மருத்துவ செலவுத் தொகையை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற மாவட்ட சுகாதார அலுவலரிடம் அனைத்து அசல் மருத்துவ ஆவணத்தையும் இணைத்து, கடந்த 14.12.2021-இல் மாவட்ட சுகாதாரத் துறை குழு மூலம் ரூ. 3,44,460 -க்கு ஒப்புதல் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு ஆவணங்களுடன் அனுப்பி வைத்து, மருத்துவ செலவுத் தொகை வழங்கக் கோரிக்கை விடுத்தாா்.

ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் மருத்துவ செலவுத் தொகையை தராமல் அலைக்கழித்ததால், மன உளைச்சலுக்குள்ளான குமாா் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மருத்துவ செலவுத் தொகையை பெற்றுத்தர கோரி, கடந்த அக்டோபா் மாதம் பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இவ் வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜவஹா், உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், குமாருக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ. 3,44,460 மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரத்தை தீா்ப்பு நகல் கிடைத்த 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.