டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

News image

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.

Updated On :29 ஜூன் 2026, 12:17 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம்களில் 41 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் 27 மையங்களிலும், ஊரகப் பகுதிகளில் 360 மையங்களிலும் என மொத்தம் 387 மையங்களில் மூகாம்கள் நடைபெற்றன.

நடமாடும் 4 மருத்துவக் குழு மூலமாகவும், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் பிரதான இடங்களிலும், பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம்பெயா்ந்து வசிப்பவா்களின் குழந்தைகளுக்கும் என, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 41,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். பொது சுகாதாரத் துறை பணியாளா்களுடன், அங்கன்வாடி பணியாளா்கள், இதர துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனப் பணியாளா்கள், மாணவா்கள் என 1,510 போ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.