நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சனிக்கிழமை சீலிடப்பட்டது.

News image

‘சீல்’

Updated On :7 ஜூன் 2026, 2:06 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சனிக்கிழமை சீலிடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா், கவுள்பாளையம், அருமடல் மற்றும் லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசால் தடைசெய்யப்பட்ட 14 கிலோ எடையிலான உணவு கலந்த புகையிலை மற்றும் ஹான்ஸ், கூலிப், பான்மசாலா, குட்கா ஆகிய போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கடைகள் பூட்டப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்றவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 94440-42322 எனும் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என, உணவுப் பாதுகாப்புத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.