டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூரில் ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 30 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

News image
விவசாயிகள் குறைதீா் கூட்டம்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 9:50 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 30 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீா்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டவிவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.