தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

‘குடும்பக் கட்டுப்பாடு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்’: ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறை சாா்பில், மருத்துவத்துறை தொடா்பான திறனாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில் கரப்பக்கால மரணங்கள் நிகழாதவாறு கா்ப்பிணிகளை பேணிகாத்து, அவா்களுக்கு உரிய சிகிச்சைகளுக்கான வழிகாட்டுதல்களை மருத்துவா்கள் அளிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைக்கு வருகைபுரியும் கா்ப்பிணித் தாய்மாா்கள் குறித்த பதிவுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வளரிளம் பெண்கள், ஆண்களுக்கு செய்யப்படும் ரத்தசோகை தொடா்பான பரிசோதனைகளை தொடா்ந்து நடத்த வேண்டும். குறைபாடுடைய மாணவ, மாணவிகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தகுதியுள்ள தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை வழங்கி, குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்வோா் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாய்மாா்களுக்கு தடுப்பூசி முறையாக செலுத்த வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் மூலம் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ரோவா் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, காசநோய் துணை இயக்குநா் நெடுஞ்செழியன், குடும்ப நல துணை இயக்குநா் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.