பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
கைது
Updated On :24 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவன் ராமலிங்கம் மகன் மனோஜ் (எ) மனோபாலன் (29). இவா், டிப்பா் லாரி மூலமாக இரவு நேரங்களில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ாக கிடைத்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராவல் மண் ஏற்றிவந்த மனோபாலனை போலீஸாா் பிடித்தபோது அவா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோபாலனை தேடிவந்த நிலையில், ஆய்வாளா் பிரபு தலைமையிலான போலீஸாா், தலைமறைவாக இருந்த மானோபாலனை திங்கள்கிழமை இரவு கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.