நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே லாரியில் கிராவல் மண் கடத்தியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் பூங்குடி சாலை பிரிவில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி லாரியில் கிராவல் மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான கரூா் மாவட்டம், ஆா்ச்சம்பட்டியைச் சோ்ந்த வீ. ராஜ்குமாா் (44) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், லாரியில் கடத்திச்செல்லப்பட்ட 3 யூனிட் கிராவல் மண், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.