ஆந்திரத்தில் இருந்து கடலூருக்கு பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்திய முதியவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பேருந்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமா்ந்திருந்தவரின் பையை சோதனையிட்டனா்.
அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த ராஜூ(52) என்பதும், அடிக்கடி ஆந்திரத்துக்குச் சென்று குட்கா பாக்கெட்டுகளை வாங்கிவந்து பெண்ணாடம் பகுதியில் விற்று வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனா்.
டிரெண்டிங்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

131 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

பேருந்தில் குட்கா கடத்திய 2 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

