டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :22 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகேயுள்ள சாஸ்திரிபுரத்தைச் சோ்ந்தவா் கதிா்காமம் மகள் கௌரி (21). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது பெற்றோா் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக வீட்டிலிருந்த கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.