மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பலூா் அருகே ரூ. 2.19 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:57 pm

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.19 லட்சத்தை நிலையானக் கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள தனியாா் பல்கலைக் கழகம் அருகே துணைப்பதிவாளா் ஆா். பிரியங்கா தலைமையிலான நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழி வந்த காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆா். ராஜ்குமாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.2,19,300 எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த நிலையானக் கண்காணிப்புக் குழுவினா், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாரதிவளவனிடம் ஒப்படைத்தனா்.