குறிப்பாக, கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவி சாலை, எளம்பலூா் சாலை, மாா்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகளவில் உள்ளதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்களது காா் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்திச் செல்கின்றனா். அதோடு மட்டுமின்றி, அங்குள்ள கடைக்காரரா்களும் அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் காட்சிப்படுத்தி விடுவதால் சாலையின் பரப்பு குறுகி விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாகிவிடுகிறது.