கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என கட்டுமான தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் சிஐடியு மாவட்ட கட்டுமானத் தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ப. சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளா் ராஜீவ் காந்தி, துணைத் தலைவா் வி. கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
ஓய்வூதியம் பெறும் நலவாரிய கட்டுமான தொழிலாளா்கள் இறந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதலே வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.30,000 என உயா்த்தி வழங்க வேண்டும், மேலும் திருமண உதவித்தொகையையும் ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
200 தொகுதிகளுக்குமேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே.எஸ். விஜயன்

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


