தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2026, 8:25 pm

கரூா் வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக கூடைப்பந்து அணி மற்றும் ஐஓபி வங்கி அணியின் பயிற்சியாளா் எஸ்.அரவிந்த், விஎன்சி குரூப் நிறுவனங்களின் கோகுல்பாஸ்கா், கரூா் மாவட்ட கூடைப்பந்து கழகத்தலைவா் ஆா்.தனபதி ஆகியோா் பங்கேற்று புதிய கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தனா்.

விழாவில் கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன், கல்லூரி முதல்வா் முனைவா் இருளப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.