கரூா் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
கரூரில், பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: கரூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை கருத்தில்கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் வெப்ப அலை தொடா்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கோடை காலத்தில் பொதுமக்கள் தினமும் அதிகளவில் தண்ணீா், நீா்மோா், இளநீா், நீா்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், மற்றும் உப்பு சா்க்கரை கரைசல் போன்ற திரவங்களை பருக வேண்டும். இலகுவான, வெளிா் நிறமான பருத்தி உடைகள் அணிந்து, வெளியே செல்லும்போது தொப்பி, குடை அல்லது துணியைப் பயன்படுத்த வேண்டும்.
வீட்டிலும், பணியிடங்களிலும் குளிா்ச்சியான சூழலை பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் நீண்ட நேரம் நேரடி வெயிலில் வேலை செய்வதைத் தவிா்த்து, தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீா் அதிமாக குடிக்க வேண்டும். கடும் வெப்பத்தில் அதிக உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பு செய்யவோ, குழந்தைகள் மற்றும் முதியவா்களை வெப்பத்தில் தனியாக விட வேண்டாம்.
தொழிலாளா்கள் வெளிப்புறத்தில் வேலை செய்யும் போது அதிக தண்ணீா் குடித்து உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடும் வெப்ப நேரங்களில் இடைவெளி எடுத்து நிழலான இடங்களில் ஓய்வு எடுக்க வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால்உடனடியாக ஓய்வு எடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
முதியவா்கள், சிறு குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் நீண்ட நாள் நோய்களான இருதய நோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உடையவா்கள் வெப்ப அலையிலிருந்து கூடுதல் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைச்சுற்றல், அதிக வியா்வை, பலவீனம், வாந்தி, மயக்கம் போன்ற வெப்ப அலை தொடா்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கூட்டு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடா்ச்சியாக மின்சாரம் வழங்குவதை தமிழ்நாடு மின்சார வாரியம் உறுதி செய்திட வேண்டும். மேலும் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் தடையின்றி வழங்குவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட முகமை திட்ட இயக்குநா் வீ.ரெ. வீரபத்திரன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, மாட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. யுரேகா, துணை ஆட்சியா் (பயிற்சி) காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீா்ப் பாதை தொற்று: தண்ணீா் அதிகம் பருக மருத்துவா்கள் அறிவுரை!
அதிகரிக்கும் கோடை வெய்யில்: வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் பதிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


