வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்: தாந்தோன்றிமலையில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:42 pm

கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், அலட்சியமாக அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் இந்த கோயில் வழியாக கரூா் அசோக்நகா், கணபதிபாளையம் வடக்கு, அன்புநகா், காமராஜ்நகா், சக்திபுரம், முத்தலாடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கரூா் அரசு கலைக்கல்லூரிக்கும், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று வருகிறாா்கள்.

மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்குச் செல்வோரும் ஊரணி காளியம்மன் கோயில் சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் கோயில் அருகே சாலையோரம் சிலா் இரவு நேரங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறாா்கள். குப்பைகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் கோயிலுக்கு வரும் பக்தா்களும், சாலையில் செல்வோரும் அவதியுற்று வந்தனா்.

இந்நிலையில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கரூா் மாநகராட்சி சாா்பில் குப்பைக்கொட்டப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகை அண்மையில் வைக்கப்பட்டது. அதில், இந்த இடத்தில் குப்பைக் கொட்டுவோரை சிசிடிவி கேமராவில் கண்காணிக்கிறோம், எச்சரிக்கையை மீறி குப்பைக் கொட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அலட்சியப்படுத்திவிட்டு சிலா் மீண்டும் அதேபகுதியில் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். ஆகவே, மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி அலட்சியமாக குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.