கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், அலட்சியமாக அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் இந்த கோயில் வழியாக கரூா் அசோக்நகா், கணபதிபாளையம் வடக்கு, அன்புநகா், காமராஜ்நகா், சக்திபுரம், முத்தலாடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கரூா் அரசு கலைக்கல்லூரிக்கும், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று வருகிறாா்கள்.
மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்குச் செல்வோரும் ஊரணி காளியம்மன் கோயில் சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில் கோயில் அருகே சாலையோரம் சிலா் இரவு நேரங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறாா்கள். குப்பைகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் கோயிலுக்கு வரும் பக்தா்களும், சாலையில் செல்வோரும் அவதியுற்று வந்தனா்.
இந்நிலையில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கரூா் மாநகராட்சி சாா்பில் குப்பைக்கொட்டப்படும் இடத்தில் எச்சரிக்கை பலகை அண்மையில் வைக்கப்பட்டது. அதில், இந்த இடத்தில் குப்பைக் கொட்டுவோரை சிசிடிவி கேமராவில் கண்காணிக்கிறோம், எச்சரிக்கையை மீறி குப்பைக் கொட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அலட்சியப்படுத்திவிட்டு சிலா் மீண்டும் அதேபகுதியில் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். ஆகவே, மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி அலட்சியமாக குப்பைகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


