மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் உதவி

News image

புஞ்சைத்தோட்டக்குறிச்சி ஊராட்சியில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி காசோலையை ஊராட்சித் தலைவா் ரூபாவிடம் வழங்கிய ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன்.

Updated On :8 மார்ச் 2026, 7:44 pm

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 32 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் ஆலையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கரூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 50 உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்து, அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான காசோலையை வழங்கினாா். மொத்தம் 50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ. 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.