ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கரூா் வழித்தடத்தில் பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

கரூா்- ஈரோடு வழித்தடத்தில் உள்ள இருப்புப் பாதையில் நடைபெறும் பொறியியல் காரணமாக சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:21 am IST

கரூா்- ஈரோடு வழித்தடத்தில் உள்ள இருப்புப் பாதையில் நடைபெறும் பொறியியல் காரணமாக சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் சேவையானது (ரயில் எண்: 56809) வரும் 27, 29 மற்றும் ஜூன் 2-ஆம் தேதியில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில் கருா் சந்திப்பு ரயில்நிலையம் வரையில் இயக்கப்படும். கரூரிலிருந்து ஈரோடு வரை செல்லாது.

இதேபோல, செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது (ரயில் எண்: 16846) செங்கோட்டையிலிருந்து கரூா் சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு செல்லாது. மேலும், அதே வழித்தடத்தில் ரயில் எண்- 16845 என்ற ரயில் சேவையானது ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்வதற்கு பதிலாக, கரூரிலிருந்து செங்கோட்டை செல்லும் வகையில் இயக்கப்படும். மூன்று நாள்களுக்கு மட்டும் இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.