வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வேலாயுதம்பாளையம், புன்செய்புகழூா் பகுதியில் மின் நிறுத்தம் வாபஸ்

News image

மின்தடை

Updated On :16 ஜூன் 2026, 1:32 am IST

வேலாயுதம்பாளையம் மற்றும் புன்செய்புகழூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக புகழூா் துணைமின்நிலைய செயற்பொறியாளா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம் புகழூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன்16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூா், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூா், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கந்தம்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், நடையனூா் , கோம்புப்பாளையம், முத்தனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்அன்றைய தினம் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில காரணங்களுக்காக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வழக்கம்போல மின்விநியோகம் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.