மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் தலைவரும், கரூா் மக்களவை உறுப்பினருமான செ.ஜோதிமணி தலைமை வகித்து பேசியது:
கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறுதுறை சாா்ந்த 54 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அது தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), எம்.சத்யா (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ) சு.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாநல்லூா்: 6 இடங்களில் உயா்கோபுர மின்விளக்கு இயக்கிவைப்பு

உரிய நேரத்தில் திறக்கப்படாத அரசுப் பள்ளியின் பூட்டு உடைப்பு

எல்லா இடங்களிலும் முதியோா்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்

நாமக்கல் ஆட்சியருடன் மாதேஸ்வரன் எம்.பி. சந்திப்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




