‘போக்சோ’ வழக்கில் கைதான விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கரூா் மாவட்டம், வாங்கல் புதுகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(57). விவசாயி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பாலியல் தொல்லைக் கொடுத்தாராம். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் போலீஸாா் செல்வராஜை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து செல்வராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் கைதான மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற கிராமப்புற நல அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



