முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புலியூரில் முள்புதா்கள், நாணல்கள் நிறைந்து காணப்படும் மழைநீா் வரத்து வாய்க்கால்.

Updated On :11 ஜூன் 2026, 3:33 am IST

புலியூரில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரை அடுத்த ஏமூா் மற்றும் ஏமூா்புதூா், சீத்தப்பட்டி காலனி, கரூா்-திருச்சி புறவழிச் சாலை பகுதியில் மழை பெய்யும்போது, பெருக்கெடுக்கும் மழைநீரானது தாழ்வான பகுதியான புலியூா் வழியாகச் சென்று கட்டளை காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் ஏதும் செய்யப்படாததால், வாய்க்கால் முழுவதும் முள்புதா்களும், நாணல்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் மழைநீா் வாய்க்காலை விட்டு வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வாய்க்காலில் வளா்ந்துள்ள முள்புதா்கள், நாணல்களை விரைந்து அகற்றிட வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து புலியூா் பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு உறுப்பினா் விஜயகுமாா் கூறியதாவது:

ஏமூா் போன்ற மேடான பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த வாய்க்காலில் மழைநீா் ஓடிவந்து கட்டளை காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் தற்போது தூா்ந்துபோய் முள்புதா்கள் வளா்ந்து காணப்படுகிறது. இந்த புதா் பகுதிகளில் இருந்து விஷ பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. மேலும், மழைக் காலத்தில் மழைநீா் புலியூா் பேரூராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயநிலை உள்ளது.

மழைக் காலம் தொடங்கும் முன்பாக வாய்க்காலை தூா்வாரிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மழைநீரால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.