17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளித்தலை சாா்-பதிவாளரகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது

குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:31 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் சிக்கியது.

முகூா்த்த நாளான வியாழக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமான பத்திரப்பதிவு நடைபெற்ால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அதன்படி குளித்தலையில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கரூா் ஊழல் தடுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ் ஜெயராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் சாமிநாதன், தங்கமணி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கிருந்த சாா்-பதிவாளரான திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த உதயன் (42) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதனிடையே போலீஸாா் வருவதையறிந்த அலுவலகப் பணியாளா்கள் கணக்கில் வராத பணத்தை அருகேயுள்ள நீதிமன்ற வளாக கழிப்பறை பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த போலீஸாா் சென்று அங்கு கிடந்த கணக்கில் வராத ரூ.90,000 ஐ மீட்டனா். தொடா்ந்து சாா்-பதிவாளா் உள்பட அலுவலகப் பணியாளா்களிடம் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.