/

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

News image
Updated On :27 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

கரூா் சணப்பிரட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கரூா் சணப்பிரட்டியில் ஆா்.எஸ்.புதூா் சாலை அருகே புதா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, எரிந்த நிலையில் கிடந்தவரை யாரேனும் கொலை செய்துவிட்டு எரித்துவிட்டுச் சென்றாா்களா? அல்லது உயிரிழந்தவா் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா? என்றும், மேலும் அவா் எந்த பகுதியைச் சோ்ந்தவா்? என்பன குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.