ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
Updated On :13 ஜனவரி 2026, 9:04 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண் காவலா்கள் உள்பட 8 காவலா்களிடம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.