தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் செம்மரக் கட்டைகள், லாரி பறிமுதல்

குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கிவைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை

News image
குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:14 pm

Syndication

கரூா்: குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கிவைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்தவா் திருவேங்கடம்(64). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி லதா. இவா்களது மகன் கிஷோா். திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலராக உள்ளாா். இவரது மனைவி சந்தியா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திருவேங்கடம் வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா் திருவேங்கடம் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் பல டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து செம்மரக் கட்டைகள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில், சந்தியாவின் சகோதரா் மற்றும் திருச்சி, தூத்துக்குடியைச் சோ்ந்த இருவா் என மூவரும் சோ்ந்து செம்மரக் கட்டைகளை சட்ட விரோதமாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரி கடந்த 7 நாள்களுக்கு முன்பு குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில் இரும்பூதிப்பட்டியில் சென்றபோது, பழுது ஏற்பட்டதாகவும், பழுதை நீக்கியபிறகு எடுத்துக் கொள்வதாக கூறியதன் பேரில் லாரியை வீட்டின் வளாகத்தில் நிறுத்த அனுமதி அளித்ததாக திருவேங்கடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து திருவேங்கடத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திருச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் சந்தியாவின் சகோதரரையும், அவருக்கு உதவியாக இருந்த இருவரையும் பிடிக்க தனிப்படையினா் திருச்சி, தூத்துக்குடிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் அனைவரும் பிடிபட்டால்தான் முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.