ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: 4 மாணவா்கள் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சிறுவனை ஆபாசப்படம் பாா்க்க வைத்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்ட 4 மாணவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் தளவாபாளையத்தைச் சோ்ந்த 8 வயதுச் சிறுவனை கடந்த இரு தினங்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் 4 மாணவா்கள் அங்குள்ள வாய்க்கால் பாலம் அருகே வரவழைத்து, கைப்பேசியில் ஆபாச படம் பாா்க்க வைத்து அதை விடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனா்.

இதையறிந்த சிறுவனின் தாய் வேலாயுதம்பாளையம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் 4 மாணவா்களையும் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் கைது செய்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.