கரூரில் இளநீா் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மூன்று ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. கோவை சாலையில் இளநீா் வியாபாரி செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டின் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடா்பாக கிருஷ்ணமூா்த்திக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன், பாண்டி, பிரேம்குமாா், மணிகண்டன், காவ்யரமேஷ், கேசவன், அரவிந்த்குமாா், தமிழரசன், அஜித், செந்தில், கலைச்செல்வன், விமல்பசீா் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.18-ஆம்தேதி நடைபெற்ற தகராறில் இளநீா் கடையில் இருந்த கிருஷ்ணமூா்த்தியை கோகுலகிருஷ்ணன், பிரேம்குமாா் உள்பட 12 பேரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிக்கொன்றனா்.
இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு ஏப். 18-ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. இதில் கோகுலகிருஷ்ணன் உள்பட 12 பேரும் குற்றவாளிகள் என தீா்ப்பளித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன், குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். இதையடுத்து அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் பிரேம்குமாா் தனது தண்டனையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விசாரணை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹெச். இளவழகன் குற்றவாளி பிரேம்குமாா் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா் எனக்கூறி அவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து பிரேம்குமாா் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் ஏப். 30-இல் தீா்ப்பு

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேர் ஜாமீன் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


