தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஏமூா்புதூரில் கூடுதல் பேருந்து வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

News image

ஏமூா்புதூரில் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா. உடன் ஒன்றியச் செயலா் எம். ரகுநாதன் உள்ளிட்டோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:13 pm

ஏமூா்புதூரில் கூடுதல் பேருந்து வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வேடா்தெரு, மலையப்பநகா், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், கோவக்குளம் தெற்கு, ஏமூா்புதூா், நடுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த அவா் பேசியது:

திமுக ஆட்சியில்தான் மாயனூா் கதவணை கட்டப்பட்டு 0.4 டிஎம்சி தண்ணீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் மாயனூரைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி, குடிநீா் வசதி பெறுகின்றன. இதேபோல காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் வெட்டியதும் திமுக ஆட்சியில்தான். இதுபோன்று திட்டங்களைச் செயல்படுத்தி வேளாண் தொழிலை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதும் திமுகதான்.

தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திமுகவுக்கு என்றென்றும் ஆதரவாக இருங்கள். ஏமூா்புதூா் பகுதிக்கு கூடுதலாக பேருந்து, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் எம். ரகுநாதன், திமுக மாவட்ட துணைச் செயலா் பூவை. ரமேஷ்பாபு மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.