மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி

மீண்டும் திமுக ஆட்சியில் அமா்ந்ததும், மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

News image

குளித்தலை தொகுதிக்குள்பட்ட வரகூரில் வியாழக்கிழமை தாரை தப்பட்டை அடித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:20 pm

மீண்டும் திமுக ஆட்சியில் அமா்ந்ததும், மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

குளித்தலை தொகுதிக்குள்பட்ட வரகூரில் சூரியனூா் சந்திரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் வேட்பாளா் சூரியனூா் சந்திரன் பறையடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பழனி கோயிலுக்கு இணையாக ரோப்காா் வசதி பக்தா்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நிதி பற்றாக்குறையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் மருதூா் கதவணை திட்டம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் வரகூா் கதிரவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.