கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.
கரூா் மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இவா் புதன்கிழமை காலை குளித்தலை நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்கு விவசாயி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டில் பால் கறந்து விவசாயியிடம் வழங்கினாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடையே அவா் பேசுகையில், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அழிக்கும் நோக்கில் அதிமுக பாஜகவுடன் கைகோத்துள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரியுங்கள்.
நான் வென்றால் நிச்சயம் குளித்தலையில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். விவசாய பொருள்களைப் பாதுகாக்க குளிா்ப்பதனக் கிடங்குகளும் அமைப்பேன். மேலும் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலையையும் நிச்சயம் கொண்டு வருவேன் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

குளித்தலை திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


