டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

News image
கைது
Updated On :6 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள பெலாந்துறை, பாசிகுளம் புதுகாலனி தெருவைச் சோ்ந்த செல்வசிகாமணி மகன் கருப்புசாமி (43). கடந்த 10.1.2026 அன்று இவரை, 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அரியலூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், கருப்புசாமியை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.