டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருமானூா் பகுதியில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும்!

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் தமிழக அரசு நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
திருமானூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.துரைராஜ்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:29 pm

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் தமிழக அரசு நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமானூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருமானூரில் அரசு நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 வாங்குவதை அரசே வழங்க வேண்டும். 60 வயது கடந்த அனைத்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதா, மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாவட்ட துணைச் செயலா் எம்.மணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.