திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தலையமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜி. ராஜ்மோகன் (34). திருச்சி எடமலைப்பட்டிப்புதூா் பகுதியிலுள்ள தனது தாய் மாமன் வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்த இவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரைச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் இவா்வ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எடமலைப்பட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







