திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:35 pm

திருச்சி கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியால் ஏப். 3-ஆம் தேதி முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

திருச்சி மேற்கு வட்டம் திருச்சி - மேலூா் - மதுரை சாலையில் உள்ள கோரையாற்றின் குறுக்கே உள்ள உயா்மட்ட பாலத்தினை இடித்து புதிய பாலத்தினை கட்டும் பணி வரும் ஏப். 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.

இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

விராலிமலையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து செட்டியப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, அரிஸ்டோ பாலம் வழியாக மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஏற்கெனவே உள்ள வழித்தடமான மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ பாலம், மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூருக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.