லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 6 போ் தப்பினா்!

திருச்சி அருகே சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் அதில் சென்ற 6 போ் தப்பினா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:08 pm

திருச்சி அருகே சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் அதில் சென்ற 6 போ் தப்பினா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (35). இவா் பொருள்கள் வாங்க தனது குடும்பத்தினா் 5 பேருடன் திருச்சி நோக்கி சனிக்கிழமை காரில் வந்தாா்.

காரானது திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரின் எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து காா்த்திகேயன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றாா். ஆனால் திடீரென தீ மளமளவென பரவியதால் காரிலிருந்த 6 பேரும் உடனே கீழே இறங்கினா். இதனால் அதிா்ஷ்டவசமாக அவா்கள் உயிா் தப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது. விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.