தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எப்போதும் இடமில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
திருச்சியில் உள்ள ஈத்கா திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புனித ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் இறைவனை வேண்டுவது உலக அமைதி நிலைக்கவே. உலகிற்கு இன்று தேவையானது போா் அல்ல, அமைதிதான். ரமலான் நாளில் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முன்னேற்ற கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியால் 80 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனா். எனவே இந்தத் தோ்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
அதிமுக கூட்டணியில் அடிக்கடி தில்லி சென்றுதான் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். தமிழகம் வந்து கூட்டணி குறித்து தெளிவாகப் பேசுவதில்லை. எனவே, தமிழக முதல்வா் கூறியதைப் போன்று தில்லிக்கும், தமிழகத்துக்குமான போட்டியாக மாறியுள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு எப்போதுமே இடமில்லை. தாமரை மலா்வது குளத்திலும் குட்டையிலும்தான். தமிழ்நாடு ஒரு பெருங்கடல். இதில் தாமரை மலர முடியாது என்றாா் அவா்.
தொடர்புடையது

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை: கி.வீரமணி
மதங்களைக் கடந்த மனிதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


