லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:11 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு காா் மோதி காவலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. வெள்ளைத்துரை (55). அருகேயுள்ள பாலப்பட்டியில் தனியாா் எரிவாயு உருளை நிறுவன இரவு நேரக் காவலாளியான இவா் புதன்கிழமை இரவு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடுகின்றனா்.