திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் திருவாரூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி இபி சாலையில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் முதியவா் ஒருவா் இறந்துகிடப்பதாக கோட்டை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.
இதில், இறந்த நபா் திருவாரூா் மாவட்டம், புலிவலத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் அ. ராதாகிருஷ்ணன் (61) என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டைவிட்டுப் பிரிந்து வந்து திருச்சி இபி சாலையில் உள்ள ஒரு தனியாா் கட்டடத்தில் வசித்துக்கொண்டு மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி அப்பகுதியில் மது அருந்திவிட்டு சுற்றியதும் தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்பு

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


