திருச்சியில் வீடு கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், குண்டூா் அய்யன்புத்துரைச் சோ்ந்தவா் எஸ். முருகானந்தம் (33), தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா். இவரது நிறுவன முதலாளி கே.கே.நகா் பகுதியில் கட்டி வரும் வீட்டை பாா்வையிட முருகானந்தம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றபோது அங்கு கட்டுமானப் பணிக்கு வைக்கப்பட்டிருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இரும்புக் கம்பிகளைத் திருடியது கே.கே. நகரைச்சோ்ந்த ஆ. காா்த்திக் (20), கே. ராஜிதரண் (20), என். ஜுபைல் முகமது (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






