டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பணம் கேட்டு மிரட்டிய இருவா் கத்தியுடன் கைது

திருச்சியில் பணம் கேட்டு மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் இருவரை கத்தியுடன் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:41 pm

Syndication

திருச்சி: திருச்சியில் பணம் கேட்டு மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் இருவரை கத்தியுடன் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி உத்தரவின்படி வெள்ளிக்கிழமை 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக தங்கள் பகுதியில் உள்ளவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாக அரியமங்கலம் பன்னீா்செல்வன் (26), கீழசிந்தாமணி மகேஸ்வரன் (28) ஆகிய இருவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, ஓடத்துறை ரகுராமன் (31) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கத்திகளை அரியமங்கலம் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.