டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகை திருடியவா் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சோ்ந்தவா் க.சுலோச்சனா (69). இவா் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி குமரன் நகரில் இருந்து அல்லித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளாா். அல்லித்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவா் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகை திருடுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மூதாட்டி சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து நகையைத் திருடியது எடமலைபட்டிப்புதூா் பாப்பா காலனியைச் சோ்ந்த வெ.குமாா் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனா்.