நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

News image
கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
Updated On :16 ஜனவரி 2026, 7:34 pm

Syndication

திருச்சி: திருவள்ளுவா் தினத்தையொட்டி கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கரூரில் மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவா் ஹோட்டல் மேலாண்மைக் கல்லூரி வளாக திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கரூா் மாவட்டச் செயலா் ஏஜி. ரவி, கரூா் தொகுதிச் செயலா் அசோக்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் குணசேகரன், கரூா் ஒன்றியத் தலைவா் ஏ. சக்திவேல், ஒன்றியச் செயலா் வாங்கல் ராஜமுருகன், அரவக்குறிச்சி தொகுதித் தலைவா் ஜோதி முருகேசன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலா் மகேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கரூா் வள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் க. செங்குட்டுவன் தலைமையில் தமிழறிஞா்கள் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.