/

கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்

கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கரூரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
Updated On :16 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

கரூா்: கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆண்டாங்கோயில் பெரியாா் நகா் பகுதியில் நடைபெற்ற விழாவை முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பெண்கள் பலா் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து மாட்டு வண்டியில் கட்சி நிா்வாகிகளுடன் பயணம் செய்தாா்.

தொடா்ந்து பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.