நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சியில் பரவலாக மழை

News image
திருச்சி பால்பண்ணை டிமாா்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை மழையில் நனைந்து சென்ற வாகன ஓட்டிகள்.
Updated On :11 ஜனவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலமாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் தாழ்வழுத்த மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில நாள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.

ஏற்கெனவே, பனியினால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழையால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.