/

அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.14-இல் சமத்துவப் பொங்கல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:44 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 14-ஆம் தேதி பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

அனைத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் தவறாது ஜன.14-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெறவிருப்பதால், சுயஉதவிக் குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.